பாச்சரம்-1
(வேறுபட்ட படைப்புகளின் தொகுப்பு)
-
கூடுங்காண் நின்கனவும் கொள்வாய்நின் வேண்டுதலை
ஆடுங்காண் நெஞ்சுனிறை யானந்தம் - ஆடுமயில்
கானகத்தே யாடிக் கருந்தோகை தான்விரிக்க
வானம் பொழியும் மழை (31-07-2009) -
பசுமையாய் என்னெஞ்சிற் பாவுமுன் னெண்ணம்
வசியமா யென்னை யுருக்கும் - கசியுமென்
நெஞ்சின் சுமையிறக்கி நீளும் துயில்தன்னில்
கொஞ்சுங்காண் நின்றன் கனவு (29-07-2009) -
எட்டா விடமாம் இசையுலகி லோர்சிகரம்
தொட்டார்காண் ஓர்பெண்ணாய்ப் பல்லவி பட்டம்மாள்
மும்மூர்த்தி மாதருண் மூத்தோர் உயிர்நீத்தும்
இம்மையை நீட்டும் இசை (17-07-2009) -
என்றுமெழும் சந்திரனில் நால்பத்து ஆண்டுமுன்னர்
இன்றன்றோ கால்வைத்தான் ஓர்மனிதன் - வென்றதனால்
அவ்வேளை சூள்கொண்டான் ஓர்நாளில் விண்கலத்தால்
செவ்வாய்க்கும் காண்பான் வழி (21-07-2009) -
அலையாய் அவள்வந்துச் சென்றாளென் நெஞ்சே
அலையாய் நினைந்தவளை நீயும் - உலர்ந்த
இலையென ஓர்நாள் உதிர்ந்தேயேன் வாழ்வில்
இலையென வானாள் அவள் -
காதலென்றேக் கண்ணடித்தான் கைப்பிடித்தான் ஓர்நாள்நான்
தேதிபார்க்க நம்மணத்துக் கென்றபோது - சாதிகாட்டி
மெய்யெனச் சொன்னவன்தான் மெல்லவெந்தன் கையகற்றிப்
பொய்யெனப் போய்விட்டான் பார் -
அனுதினமும் ஆற்றில் சினமோடு தோன்றி
தினந்தேடும் செங்கதி ரோனே - மனதாளும்
வெண்ணிலவோ வாருங்காண் காரிருளில் நீயறிய
உண்மை யுரைத்தேன்காண் இன்று -
வாழுமுள்ளம் உன்னையென்றும் வாழ்த்தும்; நினையெண்ண
வீழுமே என்வினையு மோர் நொடியில் - வேழமுகா
என்னைத் தினங்காக்கும் நாயகனே இப்புவியில்
நின்னை வணங்காதோர் யார் -
சங்கரனை பணிந்திருப்போம்
படைப்பமைப்பு: தரவு கொச்சகக் கலிப்பா (காய் காய் காய் காய்)பாடல்:
அங்கரியில் விடமேற்றுச் சங்கரியை யிடமேற்று
பங்கயனின் தலையிருத்தி மங்கையினைத் தலையிருத்தி
செங்கண்மால் மதனழித்துச் செங்கண்ணால் மதனழித்த
சங்கரனை அணிந்திருக்கும் சங்கரனைப் பணிந்திருப்போம்சொல் பிரித்து:
அங்கு அரியில் விடம் ஏற்றுச் சங்கரியை இடம் ஏற்று
பங்கயனின் தலை இருத்தி மங்கையினைத் தலை இருத்தி
செங்கண்மால் மதன் அழித்துச் செங்கண்ணால் மதன் அழித்த
சங்கு அரனை அணிந்திருக்கும் சங்கரனைப் பணிந்திருப்போம்சொல் பொருள்:
அரி - கடல்; பங்கயன் - பிரமன்; இருத்தி - அறுத்து / பொருத்தி;
செங்கணான் - திருமால்; மதன் - செருக்கு; சங்கு - கழுத்து -
உன் மௌனம்
என் காதைக் கிழிக்கிறது -
பேசு, என் காது குளிரட்டும்! -
ஊறியூறிக் கல்தேய்த்து ஊரோடி ஊண்சேர்க்குஞ்
சோராச் செயற்திறன்கொள் செவ்வெரும்பே - ஏறும்
வழித்தேடிச் சோம்பாது நாமுணங்கி ஓயா
துழைப்போமின் ஊரெலாம் ஊண் -
வெளிச்சம்,
இது ஒரு
தொடர் மாரத்தான் ஓட்டம்.ஒளிக்கீற்றை
மின் கம்பங்களுக்கு
கொடுத்தபடி
தன் முறை முடிக்கும்
சூரியன். -
காக்காக்கும் மாகவி கொக்கொக்க கோவாய்க்கே
போய்க்காக்கின் நாகாய்க்க காய்கவிக்கு - காக்காவோர்
நாகாக்க நீர்க்கா தரக்கவிக்கோ நீர்கைக்க
மேபார்க் கழிகரையும் கா
பொருள்:
காக்காக்கும் = சரசுவதி காக்கும்
மாகவி கொக்கொக்க = மகா கவி கொக்கு போன்று
கோவாய்க்கே போக்காக்கின் = அரசனின் வாயிலில் நின்று காத்திருக்கும் போது
நாகாய்க்க காய்கவிக்கு = கவியின் நா வரண்டு தாகத்தால், மற்றவர்களை வைத கவிக்கு
காக்காவோர் = காவல் காப்போர்
நாகாக்க = கவியின் நாவினை காக்க (தாகத்தை அடக்க)
நீர்க்கா = இள நீர்க்காயை
அக்கவிக்கோ நீர்கைக்க = அந்த கவிக்கு அந்த நீர் கசக்க
மேபார்க் கழிகரையும் கா = மேற்ப்பார்க்கையில் கழிந்து கரையும் காக்கை -
அம்மம்மா எம்மாமா அம்மாமி சேர்ந்துமைமல்
கைம்மா இழுமா ரதமேறி - இம்மையில்
சும்மை சுமக்கயாம் மாகொளப் பெற்றேனே
மைம்மையின் மாமைக் கரம்
சொற்களின் பொருள்:
அம்மம்மா = பாட்டி
எம்மாமா = என்னுடைய மாமா
அம்மாமி = மாமன் மனைவி
மைமல் = மாலைநேரம்
கைம்மா = யானை
இம்மை = இப்பிறப்பு
சும்மை = சுமை
மா = செல்வம்
மைம்மை = மலடி
மாமை = கருமை
பாடலின் பொருள்:
எனது பாட்டி, மாமா மற்றும் மாமியுடன் மாலை நேரத்தில் யானை இழுக்கும் ரதத்தில் ஏறி சென்று, இந்த பிறப்பில் சுமையாக, பணம் கொடுத்து ஒரு மலடியின் கருப்பு கரத்தை பற்றி மணம் செய்து கொண்டேன். -
நாம்கடவுள் என்றே சிலர் நடிப்பர் நகைப்புடன்
ஓமென்று வாய்திறந்து பூக்கொடுப்பர் - ஆமெனில்
தொட்டுழச் செய்தவர் தீர்ப்பர் பிணியாவும்
கெட்டோம் இதை நம்பி நாமும் -
வருமென்றே வாய்திறந்து வாழ்ந்திடின் வாளாய்
தரும் நம் உலகமெனல் தவறு - உறைப்பின்
செயச்சிறக்கும் நம்செய லாக்கம தொன்றே
உயர்த்திடும் நம்மை உணர் -
எல்லாப் புகழும் இறைக்கென்றே சொன்னாய்நீ
சொல்லாப் புகழடைந்தும் செறுக்கற்று - உள்ளோர்
அகங்குளிற அருசுவை அள்ளித்தந் திசையின்
சுகங்காட்டி சுடரகு மானே -
கர்பம் தரித்து கடந்துலகில் வீழ்ந்தோடி
சொற்பமாய் யாவும் சுகித்துப்பின் - அற்பனாகி
வாழ்ந்து அலையா தவந்திருத் தாள்தேடி
வீழ்ந்தவன் நாமம் ஓது -
என்னிடமிகை யேதுமிலா திருந்தும் எடுத்தெனை
முன்னிடம் நிறுத்தி மகிழ்ந்தாய் - பண்ணுடன்
கவிதையினும் மேலாய் பகிர்ந்தன்பு உணர்த்திடப்
புவியதனில் பொருளிலை காண் -
கனவினில் காரிருளில் கருத்தவிடி காலையிலும்
தினம்வரும் தினகரனின் தீயினிலும் - அனல்தணிந்த
மாலைவெயில் போதினிலும் மருகுமி ரவினிலுமென்
வேலை தமிழ்ப் படைப்பு -
கண்டோம் கருத்தினையாம் கவின்மிகு நின்கவியில்
கொண்டோம் பயன்பலநின் கவிக்கொடையாலே - பண்டோர்
படைத்திட்ட காவியப் பாச்சுவை மாறாதின்றும்
கிடைக்க நின்பாவே வழி -
மனமுண்டோ தொடரலையாய் மற்றுமோர் கவிகோர்க்கின்
தினம்மெல்ல தித்திக்கும் தீந்தமிழ்தான் - சுனைவழி
ஊற்றெடுக்கும் தூய்நீர்போல் நம்நாவில் இக்குழுமம்
சேர்க்கும் தமிழ்ச்சுவை இனிது -
ஆனந்தவா சிகளொரு புறம்மறுபுறம் ஏழ்மையென
ஏனிந்த ஏற்றத் தாழ்வு - வானின்று
பெய்மழை கடல்பாலை எனக்கருதா போன்றிங்கே
செய்கஒரு சமச்சீர் விதி -
அதற்காய் அடிவைத்தாய் அருகிலெனை அழைத்தாய்
இதமாய்சொல் கொண்டெனை ஏமாற்றி - பதம்பார்க்க
பழகிய நின்காதல் பலருக்கும் சொல்வேன்யான்
அழகிய அடிமட்டப் பொய் -
காணாமலு னையான்காலவீ தியில்தேடியும் நெஞ்சு
கூனாமல் தான் உள்ளேன் குறையின்றி - ஆனாலும்
தாளாத சோகத்தில் உழல்கின்றேன் நின்பூந்தளிர்
தோளோடு சேரும்நாள் நினைந்து
